கோவை: கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் பேராசிரியர்கள் சந்திப்பு வரும் 14ம் தேதி நடக்கிறது. நல்லிணக்க பேரவை பொறுப்பாளர் ரவீந்தர் கிர்கோலே, அமைப்பாளர் திருலோகசந்தர் பங்கேற்கவுள்ளனர். சமுதாய நலனில் மாணவர்களை சிறந்த செயல்பாட்டாளர்களாக உருவாக்க, கல்லூரி பேராசிரியர்கள் பங்களிப்பு முக்கியமானது. ஆசிரியர், மாணவர்கள் இடையே உறவு, அர்ப்பணிப்பு போற்றும் வகையில் இருக்க வேண்டும். நவீன தொழில் நுட்பகளால் மாணவர்களின் எண்ணம் மாறுகிறது. சிந்தனைகள் சிதறுகிறது. இளைஞர்களின் சக்தி தொழில் நுட்ப கருவிகளால் திசை மாறுகிறது. இந்த சந்திப்பு நிகழ்வு மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படும். பேராசிரியர்களின் கருத்துகள் மூலமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதது.
The post பேராசிரியர்-மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.